search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panruti conflict"

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 17). இவரது நண்பர் சிவசங்கர் (17). இவர்கள் 2 பேரும் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று விக்னேசும், சிவசங்கரும் கல்லூரிக்கு செல்வதற்காக கருக்கையில் இருந்து பண்ருட்டிக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அதே பஸ்சில் கருக்கை காலனி பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ் (17), சூர்யா (17), ராமச்சந்திரன் (17) ஆகிய 2 பேரும் வந்தனர். இவர்கள் அனைவரும் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பிரவின் ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து விக்னேஷ் மற்றும் சிவசங்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாளிகைபட்டு ரைஸ்மில் அருகே பஸ் நின்றபோது விக்னேசையும், சிவசங்கரையும் கீழே இறக்கி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த விக்னேசையும், சிவசங்கரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் பிரவின் ராஜ், சூர்யா, ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின் ராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கருக்கை பகுதியை சேர்ந்த பரம நாதன் (18), பார்த்திபன் (17) உள்பட 3 பேர் சேர்ந்து பிரவின்ராஜை தாக்கியதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் கருக்கை பகுதியை சேர்ந்த விக்னேசையும், சிவசங்கரையும் தாக்கினோம் என கூறினார்.

    இதைத்தெதாடர்ந்து பிரவின்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பரமநாதன், பார்த்திபன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பரமநாதனையும், பார்த்திபனையும் போலீசார் கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கீழ்கவரப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர் கீழ்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த நாய் திடீரென வள்ளியை விரட்டி சென்று கடிப்பதுபோல் சென்றது.

    இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி அங்கிருந்து வேகமாக ஓடினார். பின்னர் வீட்டுக்கு சென்ற வள்ளி தனது கணவர் ரவியிடம் நடந்ததை கூறினார்.

    பின்னர் ரவி தனது மனைவி வள்ளி மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி தட்டிக்கேட்டார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும், ரவி மற்றும் அவரது மனைவி வள்ளியும் படுகாயம் அடைந்தனர்.

    பின்னர் அவர்களை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் இருதரப்பினரும் புகார் செய்தனர். ரவி கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகம், அசோக், குப்பன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அசோக்கை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் ரவி, திவான், ராதா, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் திவானை கைது செய்தனர்.

    இருதரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉஷேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×