என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat Bell"

    • மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சி விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஊராட்சி மணி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் கூடுதல் இயக்குனரால் சமீபத்தில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

    'ஊராட்சி மணி' அழைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது வேறு தேதிக்கு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சி விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×