என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Panapalayam Road"
- புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது
- இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இதன் வழியாக பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், உகாயனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இந்த நிலையில் கடந்த மாதத்தில் ரோட்டில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு கீறல் போடப்பட்டது. புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரோட்டில் கீறல் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
விரைவில் ரோடு போடப்படும் என ரோட்டில் கீறல் போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் ரோடு போடும் பணிகள் துவங்கவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ரோட்டை விரைவாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்த பணியாளர்கள் பொங்கல் விடுமுறைக்கு சென்றதால் ரோடு போடும் பணிகள் தாமதமானதாகவும், விரைவில் பணி துவங்கும் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்