search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paid"

    • மக்களை தேடி மருத்துவ தன்னார்வலர்களை சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
    • குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மக்களை தேடி மருத்துவ தன்னார்வ லர்களை தொழிலாளியாக அங்கீகரித்து பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும், ஸ்கோரிங் முறையிலான ஊக்கத்தொகையை ரத்து செய்து பேறு காலவிடுப்பு வழங்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மக்களை தேடி மருத்துவ தன்னா ர்வலர்களை சுகாதார துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

    குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஜெயபால் விளக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் சாய் சித்ரா, மாவட்ட பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

    இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×