search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "padha yatra"

    • சிறிய மலை பெய்தாலும் காட்டாற்று வெள்ளம் இங்கு வந்து விடுகிறது.
    • தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும்.

    நெல்லை:

    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் எம். எல். ஏ. ராகுல்காந்தி, பிரதமராக வேண்டி மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்வார்கள்.

    அவர்களுடன் இணைந்து நானும் ராகுல்காந்தி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக வேண்டி சாமி தரிசனம் செய்தேன்.

    பாதயாத்திரையாக செல்லும் போது பொதுமக்களில் பலர் இந்த பாதையில் 1 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    திடீரென்று சிறிய மலை பெய்தாலும் காட்டாற்று வெள்ளம் இங்கு வந்து விடுகிறது. அந்த சமயத்தில் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தவர்கள் அதில் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரை 3 இடங்களில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதுகுறித்து நான் அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட பொது செயலாளர் நம்பித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் கக்கன், செல்லப்பாண்டி, திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவர் ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, ஜவஹர் பால் மன்ஞ் மாநில ஒருங்கி ணைப்பாளர் எம். எம்.ராஜா, காங்கிரஸ் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சுவாமிநாதன்பிள்ளை, உடையார், தங்கராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சுரேஷ், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×