search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padayatra Devotees Group"

    • திருச்செந்தூர் பாத யாத்திரை குழு சார்பாக 1000 நபர்களுக்கு அன்னை சிவகாமி மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விநாயகர் கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்காசி:

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் ராமநாதபுரத்தில் பழனி முருகன் பாதயாத்திரை குழு மற்றும் திருச்செந்தூர் பாத யாத்திரை குழு சார்பாக 1000 நபர்களுக்கு அன்னை சிவகாமி மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விநாயகர் கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பஜனை நிகழ்ச்சியில் பாரதமாதா படங்களை பொதுமக்களுக்கு வழங்கி ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி அருகே தென்மலையில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சோழராஜன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஆசிரியர் கிருஷ்ணசாமி, சங்கர நாராயணன், மாவட்ட இளைஞரணி பொதுச்செ யலாளர். நீராத்துலிங்கம், தங்கராஜ், சுமன் மற்றும் ஊர் நாட்டாமைகள், பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×