search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "own bail"

    • பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
    • வாகன மேற்கூரையில் பயணம் செய்ததாக உசிலம்பட்டியில் கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    உசிலம்பட்டி

    பசும்பொன் முத்துரா மலிங்க தேவரின் 115-வது குரு பூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடு களுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தேனியில் இருந்து உசிலம்பட்டி வழியாக பசும்பொன்னிற்கு செல்வ தற்காக டெம்போ வேனின் மேல் பகுதியில் நின்றவாறு வாகனத்தில் வந்தவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி வேனின் மேற்கூரையில் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் கீழே இறங்க முடியாது என்று கூறியதுடன், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தேனியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, அருண்குமார், அஜித்குமார், பிரேம், ராஜேஷ் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை நீதிபதி சத்தியராஜ் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

    ×