search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Owdatham"

    ரமணி இயக்கத்தில் நேதாஜி பிரபு தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஔடதம்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் நேதாஜி பிரபு வக்கீலாக இருக்கிறார். வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட காலாவாதியான மூலப் பொருட்கள் இந்தியாவிற்கு வருகிறது. இதையறிந்த அரசு, இந்த மூலப் பொருட்களை அழிக்க சொல்லி ஆணையிடுகிறது. ஆனால், மர்ம கும்பல் ஒன்று இந்த மூலப் பொருட்களை வைத்து மாத்திரைகளை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறார்கள்.

    தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்கப்படுவதை நண்பர் மூலமாக அறிந்துக் கொள்ளும் நேதாஜி பிரபு அதை தடுக்க நினைக்கிறார். இதனால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார். இறுதியில் நாயகன் நேதாஜி பிரபு, பிரச்சனைகளில் இருந்து மீண்டு, மர்ம கும்பலையும், காலாவதியான மூலப் பொருட்களையும் அழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நேதாஜி பிரபு வக்கீலாகவும், காலாவதியான மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தெரிந்ததும், அதை தட்டிக்கேட்டும் துடிப்பான இளைஞராகவும் நடித்திருக்கிறார். ஆக்‌ஷன், பாடல்கள் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    நாயகியாக நடித்திருக்கும் சமைரா டாக்டராக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்து விட்டு சென்றிருக்கிறார்கள்.



    மெடிக்கல் கிரைம் திரில்லரில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரமணி. குறைந்த பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமா அதை கொடுத்திருக்கிறார்கள். மெதுவாக நகரும் திரைக்கதை, பிற்பாதியில் விறுவிறுப்பாக முடித்திருக்கிறார்கள். ஒரு சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

    தஷி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஸ்ரீரஞ்சன் ராவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘ஔடதம்’ பார்க்கலாம்.
    ஔடதம் படத்தின் படக்குழு சந்திப்பில் பேசிய நடிகர் பாக்யராஜ், மொழி தெரியாமல் தான் கம்போடியாவில் தவித்த போது என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தியதாக பாக்யராஜ் கூறினார். #Bhagyaraj #Owdatham
    மருத்துவ உலகின் இருட்டு பக்கங்களை வெளிச்சம் போட்டு காண்பித்து மக்களுக்கு மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் ஒளடதம். நேதாஜி பிரபு நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பிரபலப்படுத்த ஒளடதம் பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை வினியோகிக்க உள்ளனர்.

    அதற்கான தொடக்க விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பாக்யராஜ் பேசும்போது ’படக்குழுவினர் தமிழா தமிழில் கையெழுத்திடு இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

    தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன். காசோலைகளிலும் தமிழில் தான் கையெழுத்து போடுவேன். நான் சீனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள்.



    அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டி இருந்தது.

    என் பாஸ்போர்ட்டில் சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்... சில நாடுகளில் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன”. இவ்வாறு பாக்யராஜ் பேசினார். #Bhagyaraj #Owdatham

    ×