search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Outpost"

    • ஆனந்தூரில் புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி. திறந்து வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் துரத்தும்நிஷா அபுதாஹீர் தலைமை தாங்கினார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர், சிறு நாகுடி, இராதானூர், சாத்தனூர், திருத்தேர்வளை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

    குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வரவேண்டி இருப்பதாலும், இந்த காலதாமதத்தால் குற்றவாளிகள் தப்பித்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆனந்தூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஆனந்தூர் பஸ் நிலையம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் துரத்தும்நிஷா அபுதாஹீர் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தெற்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் அப்துல்சலாம், செயலாளர் முகமது இஸ்மாயில், வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் மவுதார் சாகுல்ஹமீது, செயலாளர் சீனிஉமர், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகாபிரபு, துணைத்தலைவர் சேகர், ஆணையாளர் முத்துகிருஷ்ணன், வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மலைராஜன், மாவட்ட கவுன்சிலர் உஷாராணி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டி, முசிரியாபேகம் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர்.

    திருவாடனை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் ரிப்பன் வெட்டி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். நாசீர் உசேன் வரவேற்றார்.

    ஆனந்தூரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் முகமது பலுலுல்லா பேசினார். இதில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் காந்தி, இலக்குவன், ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்.

    பா.ஜ.க. ஒன்றிய தலைவர் நரசிங்கம், துணைத் தலைவர் தமிழரசன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க. தலைவர் பட்டாணி மீரான், இஸ்லாமிய இளைஞர் சங்கத் தலைவர் உமர்அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஹரிகி ருஷ்ணன், செ ந்தாமரை, ஜெகவீரபாண்டியன், கிருஷ்ணவேணி சுமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் முகமதுரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×