search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Orthodox Christmas"

    • ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
    • ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜனவரி 6-7 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன் இரண்டு நாடுகளிடமும் நல்ல நட்புறவு வைத்திருப்பதால் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பலமுறை புதினையும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியையும் துருக்கிக்கு அழைத்து வர முயற்சி செயதுள்ளார்.

    அவ்வகையில், ரஷிய அதிபர் புதினுடன், துருக்கி அதிபர் எர்டோகன் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என புதினிடம் எர்டோகன் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த புதின், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷிய பிராந்தியமாக உக்ரைன் ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக எர்டோகனிடம் கூறியிருக்கிறார்.

    இந்த நிலையில், ஆர்த்தடாஸ் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்களுக்கு உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக புதின் அறிவித்துள்ளார்.

    ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. ரஷிய படைகள் ஜனவரி 6 ஆம் தேதி நண்பகல் 12:00 மணி முதல் 36 மணி நேரம் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கிரெம்ளின் கூறியுள்ளது.

    ரஷியா மற்றும் உக்ரைனில் வசிப்பவர்கள் உட்பட பல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜனவரி 6-7 ஆகிய நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

    ×