search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oops"

    • ஓ.பி.எஸ் அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்று அளித்தனர்.
    • ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டம் வந்தார்.அவருக்கு பூவந்தி அருகே அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்பு காரைக்குடிக்கு வந்த அ.தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகனுக்கு மாவட்ட பேரவை துணைச் செயலா ளர் பாலா, இளைஞர் அணி திருஞானம், காரைக்குடி நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அங்கு ராஜ், ரவி, மகளிர் அணி ராமாமிர்தம், பத்மா, சாந்தி, இளைஞர் அணி காட்டு ராஜா, பக்கீர் முகமது, கண்ணதாசன் உள்ளிட்ட பலர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    காரைக்குடி 5 விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கே.ஆர்.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செய்தி தொடர்பாளர் மருது அழகராஜ், வழக்கறிஞர் ராமநாதன், மாணவரணி ஆசைத்தம்பி, சுமித்ரா ரவிக்குமார் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×