search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Training Course"

    • பயிற்சி வகுப்புகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது.
    • அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில், பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

    பாரத ஸ்டேட் வங்கி தேர்வு

    ஒவ்வொரு ஆண்டும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) தேர்வினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் சுமார் 8,773 காலிப்பணியிடங்களை நிரப்ப நேரடி எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கு வருகிற 7-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://sbi.co.in/web/careers என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 28 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி.) 31 வயது வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 33 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வின் வினாக்கள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடம்பெறும்.

    இணையவழி பயிற்சி வகுப்பு

    பாரத ஸ்டேட் வங்கி நடத்தும் கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) தேர்வுக்கான எழுத்து தேர்வில் சிறப்பாக வெற்றி பெற உதவும் வகையில் வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள், திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, மொத்தம் 45 நாட்கள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. அனுபவமிக்க வல்லுனர்களால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சேர பயிற்சி கட்டணம் ரூ.7,500 ஆகும். பயிற்சிக்கான குறிப்பேடுகள் சாப்ட் காப்பியாக (soft copy) வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) ஆகும்.

    விண்ணப்பிக்கும் முறை

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புகிறவர்கள் ரூ.7,500-க்கான வங்கி வரைவோலையை (கனரா வங்கி/ இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/ பாரத ஸ்டேட் வங்கி/ இந்தியன் வங்கி) 'சிவந்தி அகாடமி, திருச்செந்தூர்' என்ற பெயரில் எடுத்து 'சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216 தூத்துக்குடி மாவட்டம்' என்ற முகவரிக்கு தங்களின் புகைப்படம், பெயர், பின்கோடுடன் முகவரி, இ-மெயில், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்களுடன் அனுப்ப வேண்டும்.

    அல்லது சிவந்தி அகாடமி இணையதளத்தின் (http://sivanthiacademy.org) மூலமாகவும், இப்பயிற்சி கட்டணத்தை செலுத்தலாம். அதன் பின்னர் பெயர் பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், வாட்ஸ்-அப் எண் போன்ற விவரங்கள் மற்றும் ரூ.7,500-க்கான ஆன்லைன் கட்டண ரசீது ஆகியவற்றை சிவந்தி அகாடமியின் மின்னஞ்சல் முகவரிக்கு (sa@aei.edu.in) அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04639-242998, 8248624842, 9443178481 ஆகிய தொலைபேசி எண்க ளில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜீலா தெரிவித்துள்ளார்.

    ×