search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officials of the Food Safety Department"

    • பவானி பகுதியில் உள்ள குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல அறிவுரை வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் பவானி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி, ஈரோடு நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் மற்றும் அருண்குமார், மொடக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எட்டிகன் ஆகியோர் பவானி பகுதியில் உள்ள குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குடிநீர் தொழிற்சாலைகளில் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா? எனவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் முறையாக தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் 20 லிட்டர் கேன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பழுதடைந்த, நாள் பட்ட கேன்களை பயன்படுத்த கூடாது என்றும், கேன்களின் மீது லேபிள் பயன்படுத்தப்படும் காலம் போன்றவை ஒட்ட வேண்டும் என்றும், ஆலையில் வேலையில் உள்ள பணியாளர்கள் தலையில் கேப்பும், கையுரையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    அதேபோல் 20 லிட்டர் கேன்கள் ஒரு மாத இடைவெளியும், ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில் 6 மாத இடைவெளி காலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    5 நிறுவனங்களில் 3 உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் குடிநீர் சம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்அப் எண் 944042322 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×