search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offering Ceremony"

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று ஏடு கொடுக்கும் விழா நடந்தது.
    • விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஏடு கொடுக்கும் விழா நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஏடு கொடுக்கும் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காலையில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    பின்பு கோவில் ஆஸ்தான மண்டபத்தில் கோயில் ஓதுவார் முத்து விநாயகம் நடராஜர், சிவகாமி அம்மன் முன்பு தேவார பாடல் பாடி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×