search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OFFENDED"

    • நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
    • மாநில பொதுச்செயலாளர் கைது

    திருச்சி:

    திருச்சி மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கவுரவ தலைவர் உஸ்மான்அலி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அகரம் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்த லைவர்கள் ராம்குமார், நாகராஜ், மாவட்டச் செயலாளர் அண்ணா துரை, துணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், திருச்சியில் இருபாலர் மதுக்கூட கேளிக்கை விடுதி நடத்த அனுமதி அளித்ததை கண்டித்து, போராட்டம் நடத்திய தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன் மீது பொய்வழக்கு போட்டு, அவரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை நீதிமன்ற காவலில் இருந்து விரைவில் விடுதலை செய்ய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் பட்டியலின மக்களை புண்படுத்திவிட்டார் என்று அம்பேத்கார் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

    புதுக்கோட்டை:

    அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், அதே மேடையில் அமர்ந்திருந்த பெண் ஒன்றிய குழு தலைவரை பார்த்து, சாதியை குறிப்பிட்டு அந்த ஒன்றிய குழு பெண் தலைவரை பொதுமக்கள் முன்னிலையில் ஜாதிய வன்கொடுமை செய்துள்ளார். இந்திய தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்,

    மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவரை ஜாதியை சொல்லி களங்கப்படுத்துவது சட்ட சாசனத்திற்கு எதிரான செயலாகும். இந்திய இறையாண்மையை காப்பற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்று அமைச்சரான ஒருவர் இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் குலைக்கும்  வகையில் பேசியது கண்டனத்திற்குரியது.

    தமிழகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கு வகிக்கும் பட்டியலின மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்திவிட்டார். இச்செயலுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில், அம்பேத்கர் மக்கள் இயக்கம் தமிழகம் தழுவிய போராட்டத்தை கையிலெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×