search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of the students"

    • வீட்டை விட்டு சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் மாணவர்களை தேடினர்.
    • அப்போது மாணவர்கள் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பழனி யப்பா வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நந்தகிஷோர் (8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் சிபினேஷ் (10), வெங்கடேஷ் மகன் ராகவன் (10). இவர்கள் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நந்த கிஷோர், ராகவன், சிபினேஷ் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் 3 பேரும் அந்தியூர் அடுத்த நாட்ராயன் நகரில் உள்ள தாமரை குட்டை என்ற பகுதிக்கு சைக்கிளில் சென்றனர்.

    அந்த பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதை கண்ட மாணவர்களுக்கு குட்டையில் குளிக்க வேண்டும் என ஆசை ஏற் பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் குட்டையில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்ற தாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விட்டு சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் அவர்களது பெற்றோர் மாணவர்களை தேடினர்.

    அப்போது தாமரைக்கரை குட்டை பகுதியில் சிறு வர்கள் வந்த சைக்கிள் மட்டும் இருந்தது. இதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குட்டையில் இறங்கி தேடினர். அப்போது மாணவர்கள் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இது குறித்து அந்தியூர் ேபாலீஸ் இன்ஸபெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து மாணவர்களின் உடல்களை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று 3 மாணவர்களின் உடல்களும் பிதே பரி சோதனை செய்யப் பட்டு அவர்களது உற வினர்க ளிடம் ஒப்படை க்கப்பட்டது. உடல்களை பார்த்து அவர்க ளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    ×