search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of the dams is"

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதைத்தொ டர்ந்து 56 நாட்களுக்கு 102 அடியில் பவானிசாகர் அணை நீடித்தது. இந்நிலையில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.33 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2,115 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என மொத்தம் 2,100 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் தொடர் மழைக்காலமாக மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 39.32 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக உள்ளது. இந்த 2 அணைகளும் கிட்ட த்தட்ட நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்றொரு பிரதான அணையான பெரும்பள்ளம் அணை 21.76 அடியில் உள்ளது.

    ×