search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha attaci"

    ஒடிசா மாநிலத்தின் மால்கங்கிரி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #NaxalsKilled
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் போலீசாரும் ராணுவமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மாவோயிஸ்டுகள் குறித்த தகவல் கிடைத்தால், அப்பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி மாவோயிஸ்டுகளை அழித்து வருகின்றனர்.

    அவ்வகையில் மால்கங்கிரி மாவட்டம் கலிமேடா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #NaxalsKilled
    ×