search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Observation towers"

    கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சார்பில் பஸ் நிலையம் வெளிப்பகுதியிலும், மணிக்கூண்டு பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து தீபாவளி பண்டிகையை யொட்டி மளிகை பொருட்கள், பட்டாசுகள், துணிகள் ஆகியவற்றை வாங்க வரும் பொது மக்கள் நகர பகுதியில் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இவர்கள் சாலைகளில் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, கச்சிராயபாளையம் சாலை, சங்கராபுரம் சாலை ஆகிய 4 சாலைகளிலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அமைப்பதன் மூலம் அங்கு வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வந்து தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என கூறினார். தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் உள்ளிட்ட போலீசார் பலரும் உடன் இருந்தனர்.

    • திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைத்துள்ளனர்.
    • கண்காணிப்பு உயர் கோபுர பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ராசிபுரம் பூக்கடை வீதி, சின்னக் கடை வீதி, கடைவீதி, பஸ் நிலைய பகுதிகள் உள்பட முக்கிய இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. ஜவுளிகள் எடுக்கவும், நகைகள் வாங்கவும், இதர பொருட்களை வாங்கிச் செல்லவும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் திரளாக வந்து செல்கின்றனர்.

    பொதுமக்களின் கூட்டத்தை பயன்படுத்தி, அவர்களது கவனத்தை திசை திருப்பி திருடர்கள் தங்கள் கைவரிசியை காட்டி செயின் பறிப்பு, நகை, பணம், வாகனங்கள் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ராசி புரம் போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இரு க்கும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், கடைவீதி, சின்னக் கடைவீதி ஆகிய இடங்களின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைத்துள்ளனர். நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 கண்காணிப்பு உயர் கோபுரங்களை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் திறந்து வைத்தனர். கண்காணிப்பு உயர் கோபுர பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம், போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் குணசிங் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×