search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indian labors"

    • வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.
    • தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பணியாற்று ம் வட மாநில தொழிலாளர்க ளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, என கட்டிட பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி கூறியதாவது:- திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள், வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களை திரித்து தமிழகத்தில் நடந்தது போல் சிலர் சமூக வலை தளங்களில் பதிவுகள் செய்துள்ளனர். அது உண்மையில்லை.திருப்பூரில் வசிக்கும் வட மாநில கட்டிட தொழிலாளர்கள் எப்போதும் போல் எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளது. தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

    ×