search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil Engineers Association"

    • பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.
    • பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    திருப்பூர்

    திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பாக பொறியாளர்கள் தின விழா சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.இதில் செயலாளர் ஆர்.பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் ராஜேஷ் தமிழரசன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பாரத ரத்னாடாக்டர் சார் விஸ்வேஸ்வரய்யா உருவப்படத்திற்கு மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

    சங்க மாநில செயலாளர் பொறியாளர் காந்தி, மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் தலைவர்கள் கலைச்செல்வன்,குமார்,ரமேஷ், பொன்னுச்சாமி, ரத்னசபாபதி, மணிகண்டன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    பொறியாளர்கள் தின விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம்.
    • தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பணியாற்று ம் வட மாநில தொழிலாளர்க ளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, என கட்டிட பொறியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி கூறியதாவது:- திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள், வீண் வதந்தி மற்றும் பொய் செய்திகளை நம்ப வேண்டாம். வேறு பகுதிகளில் நடந்த சம்பவங்களை திரித்து தமிழகத்தில் நடந்தது போல் சிலர் சமூக வலை தளங்களில் பதிவுகள் செய்துள்ளனர். அது உண்மையில்லை.திருப்பூரில் வசிக்கும் வட மாநில கட்டிட தொழிலாளர்கள் எப்போதும் போல் எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்துள்ளது. தொழிலாளர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி தொடர்ந்து பணியாற்றலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

    ×