search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nikhil"

    • குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினர் இல்லை.
    • தனியார் மருத்துவமனையில் 2 நாட்களாக சுயநினைவை இழந்த நிலையில் நிகில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஞான ஜோதி நகரில் உள்ள பாய் சர்வதேச வளாகத்தில் மாநில அளவிலான கிக் பாக்சிங் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் மைசூரை விமலா-சுரேஷ் தம்பதியின் இளைய மகனான நிகில்(வயது 23) என்பவர் கலந்துகொண்டார்.

    கர்நாடகா மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில் நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் நிகிலும் மற்றொரு வீரரும் மோதியபோது, நிகில் முகத்தில் வேகமாக ஒரு குத்துவிட்டார் எதிர் வீரர். இதனால் நிலைதடுமாறிய நிகில் அங்கேயே சுருண்டு விழுந்தார். நிகில் முகத்தில் குத்திய வீரர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட கீழே விழுந்த நிகில், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

    அவரை தூக்க முயன்ற நடுவர் நிகில் மயங்கி சுய நினைவில்லாமல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிகிலை போட்டி ஏற்பட்டாளர்கள் பெங்களூரு நகராபவியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 நாட்களாக சுயநினைவை இழந்த நிலையில் நிகில் சிகிச்சை பெற்று வந்தார்.

    எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிகிலின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். நிகிலின் தந்தை சுரேஷ் அங்குள்ள ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் போட்டியை ஏற்பாடு செய்திருந்த நவீன் ரவிசங்கர் மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதன்பேரில், நவீன் ரவிசங்கர் மீது ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து நிகிலின் பெற்றோர் கூறுகையில், "குத்துச்சண்டை அரங்கில் உள்ள தரையில் உள்ள விரிப்பு மிகவும் மெல்லியதாக இருந்தது. முகத்தில் அடிபட்டு கீழே விழுபவருக்கு தரையில்பட்டு கூடுதல் காயங்கள் ஏற்படும். போட்டி ஏற்பாட்டாளர்கள் முதலுதவியை வழங்கவில்லை.

    குத்துச்சண்டை போட்டி நடக்கும் இடத்தில் மருத்துவக் குழுவினரும் இல்லை. ஆக்சிஜன் மற்றும் ஸ்ட்ரெட்சர் வசதிகளும் அங்கு இல்லை." என்று குற்றம்சாட்டினார். இதனிடையே போட்டி ஏற்பட்டாளர் நவீன் ரவி ஷங்கர் இந்த விபத்து நடைபெற்றபோது தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவாகிவிட்டார்.

    அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் குத்து சண்டை போட்டியின் போது நிகிலை எதிராளி முகத்தில் குத்துவது மற்றும் அவர் கீழே சரிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

    சென்னையில் நடந்த மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் நிகில், அம்ருதா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். #TableTennis
    5-வது இதயம்-மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் நிகில் 4-0 என்ற கணக்கில் சுஷ்மித் ஸ்ரீராமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் பிரிவில் அம்ருதா புஷ்பக் 4-2 என்ற கணக்கில் ரிஷ்யாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

    மற்ற பிரிவுகளில் பிரவீன் குமார், தீபிகா (யூத்), பியூஸ் சாகர், நித்யஸ்ரீ (ஜூனியர்) விஷ்வா, ஷிரேயா சிவக்குமார் (சப்-ஜூனியர்), பாலமுருகன் (5-வது பட்டம்), ஷிரேயா ஆனந்த் கேடட், குருசன்ஜித், ஹன்சினி (5-வது பட்டம்) மினி கேடட் ஆகியோர் வெற்றி பெற்றனர். #TableTennis
    ×