search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new truck"

    • கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
    • திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் நகை, பணம், சில்லறை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் தினமும் ரூ 3 முதல் 5 கோடி வரை வசூல் ஆகிறது. உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கோவிலில் இருந்து உண்டியல்கள் சிறிய வாகனங்கள் மூலம் கோவிலுக்கு வெளியே கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்குள்ள கிரேன்கள் மூலம் உண்டியல்கள் லாரிகளில் ஏற்றி காணிக்கை எண்ணிக்கை நடைபெரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    கோடிக்கணக்கில் வசூல் ஆகும் உண்டியல்கள் பாதுகாப்பற்ற நிலையில் கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புதிய வடிவிலான மேற்கூரையுடன் கூடிய உறுதியான தன்மை கொண்ட லாரியை வடிவமைத்து உள்ளனர்.

    காணிக்கை உண்டியல்கள் இந்த லாரியில் பாதுகாப்பான முறையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×