என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » nellikuppam alcohol merchant arrest
நீங்கள் தேடியது "nellikuppam alcohol merchant arrest"
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மாட்டு கொட்டகையில் பதுக்கி வைத்து சாராயத்தை விற்ற வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கீழ் அருங்குணம் நத்தம் புளியந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள மாட்டு கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 120 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக நத்தம் புளியந்தோப்பைச்சேர்ந்த சக்திவேல்(வயது42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் 6 சாராய வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார்(பொறுப்பு) பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் சக்திவேலை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார். அதன்படி சக்திவேல் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் உள்ள சக்திவேலிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கீழ் அருங்குணம் நத்தம் புளியந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள மாட்டு கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 120 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக நத்தம் புளியந்தோப்பைச்சேர்ந்த சக்திவேல்(வயது42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் 6 சாராய வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார்(பொறுப்பு) பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் சக்திவேலை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார். அதன்படி சக்திவேல் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் உள்ள சக்திவேலிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X