search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai New Bus Stand"

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
    • நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியினை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலகம் இணைந்து நடத்தினர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.

    வாகன பேரணி

    நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியினை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலகம் இணைந்து நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள் வாகன பேரணி மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியினை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மகேந்திர குமார் இன்று புதிய பஸ் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இப்பேரணி யானது குலவணி கர்புரம், மேலப்பா ளையம் சிக்னல் வழியாக என்.ஜி.ஓ. காலனி வந்தடைந்தது. தொடர்ந்து அருகிலுள்ள ஒரு மகாலில் ஓட்டுனர்கள், பயிற்றுனர்கள் மற்றும் வாகன விற்பனை யாளர் ஆகியோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஹெல்மெட் கட்டாயம்

    பெரும்பாலான இருசக்கர வாகன விபத்துக்களில் இறப்புக்கு 80 சதவீதம் காரணம் தலைக்கவசம் அணியாமல் இருப்பதே ஆகும். எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டு பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்தி ருப்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணிக்க கூடாது, இந்திய தர நிர்ணய சான்று அல்லாத சாதாரண ஹெல்மெட்டுகளை பயன்படுத்த கூடாது என்று கூறி விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பது, புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் சுந்தர்சிங், உதவி இயக்குநர் சசிகலா, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சரவணன், தொழில்நுட்ப பொது மேலாளர்கள் சந்திர நாராயணன், கண்ணன், மோட்டார் ஆய்வாளர்கள் பிரபாகரன், ராஜ சேகரன், பெருமாள், மாவட்ட ஓட்டுனர் சங்கத்தலைவர் காளிதாஸ், நெடுஞ்சா லைத்துறை பொறியாளர் திருசெல்வன், லெட்சு மணன் உட்பட அரசு அலுவலர்கள், போக்கு வரத்துறை அலுவலர்கள், ஓட்டுனர்கள், பயிற்றுநர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×