என் மலர்
நீங்கள் தேடியது "Navratri festival in"
- கொடுமுடியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகின்றன.
- இதில் ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகின்றன.
இதை முன்னிட்டு புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவிலில் வடிவுடைய நாயகி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகியோர் நாள்தோறும் சிறப்பு அலங்காரங்களில் வெவ்வேறு திருக்கோல காட்சிகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று இரவு மகுடேஸ்வரர் கோவிலில் வடிவுடைநாயகி அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், ஸ்ரீலட்சுமி கஜலட்சுமி திருக்கோலங்களிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதேபோல் கொடுமுடியை அடுத்த ஏமகண்டனூரில் உள்ள ஆட்சியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு அம்மன் மகேஸ்வரி திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
இதில் ஏராமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






