search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National competition"

    தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற ஊத்துக்கோட்டை அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
    ஊத்துக்கோட்டை:

    பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அளவிலான தடகள போட்டிகள் புனேயில் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாந்தகுமார் கலந்து கொண்டு மும்முனை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார்.

    அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார். தலைமை ஆசிரியர் சிவராமன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். #tamilnews
    ×