search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natham police investigation"

    நத்தம் அருகே தனியார் பஸ் மோதியதில் கொத்தனார் பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    நத்தம் அருகே கல்லுக்கட்டி வேளாம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி மகன் மனோகரன்(வயது23). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக நத்தம்-செந்துறை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பாப்பம்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ் மனோகரன் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே தலை சிதறி பலியானார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×