search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallathangal stream"

    • அமைச்சா்கள் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து மலா் தூவினா்.
    • தாராபுரம் வட்டாரப் பகுதியில் உள்ள 4,744 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தாராபுரம் :

    விவசாயம் மற்றும் குடிநீா் தேவைக்காக தாராபுரம் அருகே நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது. தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறந்துவைத்து மலா் தூவினா். நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்கத்திலிருந்து பிரதான கால்வாய் வழியாக 35 கன அடியும், ஆற்று மதகு வழியாக 25 கன அடியும் தண்ணீா் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராபுரம் வட்டாரப் பகுதியில் உள்ள 4,744 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், பொதுமக்களின் குடிநீா் தேவையும் பூா்த்தி செய்யப்படும் என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், திருப்பூா் மாநகராட்சி 4 ம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், நல்லதங்காள் ஓடை நீா்த்தேக்க செயற்பொறியாளா் கோபி, உதவி செயற்பொறியாளா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×