search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nakshatra Temple"

    • கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருவண்ணாமலை கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    காலை முதலே அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் பிற்பகலில் தேரோட்டம் நடைபெற்றது சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    கிராமத்தில் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேரினை பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம், வில்வாரணி, மேலாரணி, போளூர், புதுப்பாளையம், செங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×