search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naga mudra"

    இந்த முத்திரை நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.
    செய்முறை :

    வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைக்கவும். மார்பு பகுதிக்கு நேராக வரும்படி வைத்துக்கொள்ளவும்.

    மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும். கற்பனைத் திறன் வளரும். தினமும் 10 முதல் 15 நிமிடம் பழகினால் போதும். மாற்றங்களை உடனடியாகக் காணலாம்.

    அரையில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ இநத் முத்திரையை செய்யலாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    பலன்கள் :

    நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.

    பரபரப்பான மனதை கட்டுக்குள் கொண்டு வரும். மனத்தெளிவு, கண்களில் பிரகாசம், மனோபலம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை அளிக்கும்.

    உடலாகிய ஸ்தூல சரீரம், வெளிமன, ஆழ்மன உணர்வுகள் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒருநிலைப்படுத்துகிறது. மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும்.
    ×