search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mushroom production"

    • கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம்.
    • பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது:- பொங்கலூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வித்து உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில், தாய்க்காளான் வித்து, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காளான் வித்து உற்பத்தி செய்வது குறித்து செயல் விளக்கப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த இரு நாள் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 25ம் தேதிக்குள் (இன்று 04255 296155 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 63794 65045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும்.
    • 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மூலனூர்:

    மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக செலவினம் ரூ.2 லட்சம் ஆகும். இதற்கான மானியமாக 50 சதவீதமாக ரூ.1லட்சம் வழங்கப்படுகிறது.

    பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும். எனவே இத்திட்டம் தேவையான விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். செல்:- 96777 76214 மற்றும் 97905 26223. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    ×