பெண் விவசாயிகள் காளான் உற்பத்தி செய்ய மானியம்

பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும்.2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம் 
கோப்புபடம் 
Published on

மூலனூர்:

மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக செலவினம் ரூ.2 லட்சம் ஆகும். இதற்கான மானியமாக 50 சதவீதமாக ரூ.1லட்சம் வழங்கப்படுகிறது.

பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும். எனவே இத்திட்டம் தேவையான விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். செல்:- 96777 76214 மற்றும் 97905 26223. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com