search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MUMvMP"

    • ரஞ்சி கோப்பையை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் என மத்தியபிரதேச அணியின் கேப்டன் கூறினார்.
    • 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.

    பெங்களூரு:

    87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை- மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் கடந்த 22-ந்தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மும்பை 374 ரன்களும், மத்தியபிரதேசம் 536 ரன்களும் குவித்தன. 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை அணி 57.3 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மத்தியபிரதேச அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய பிரதேச அணி 2-வது இன்னிங்சில் 29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மகுடம் சூடியது.

    1934-35-ம் ஆண்டு முதல் நடந்து வரும் ரஞ்சி கிரிக்கெட்டில் மத்தியபிரதேச அணி கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல்முறையாகும். அதுவும் பலம் வாய்ந்த 41 முறை சாம்பியனான மும்பையை தோற்கடித்ததால் இந்த வெற்றியை அவர்கள் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த மத்திய பிரதேச வீரர் சுபம் ஷர்மா ஆட்டநாயகன் விருதையும், 6 ஆட்டத்தில் 4 சதம் உள்பட 982 ரன்கள் குவித்த மும்பை வீரர் சர்ப்ராஸ்கான் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    இந்த வெற்றி குறித்து மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா கூறியதாவது;- "எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அனைவரும் பரவசத்துடன் உணர்ச்சி மயமாக இருக்கிறோம். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் இது. மத்தியபிரதேச அணி ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்றதன் மூலம் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது. கேப்டனாக இது தான் எனது முதல் ரஞ்சி தொடர். பயிற்சியாளர் சந்திரகாந்திடம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார்.

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ் கான் சதமடித்து 134 ரன் எடுத்தார்.

    மத்திய பிரதேசம் சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட், அகர்வால் 3 விக்கெட், சரன்ஷ்ஜ் ஜெயின் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஜத் படிதார், யாஷ் துபே 133 ரன்னும், ரஜத் படிதார் 122 ரன்னும், சுபம் சர்மா 116 ரன்னும் குவித்தனர். சரன்ஷ் ஜெயின் 57 ரன்கள் எடுத்தார்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை 2வது இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுவேத் பார்கர் 51 ரன்னும், சர்ப்ராஸ் கான் 45 ரன்னும், பிரித்வி ஷா 44 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ், சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களமிறங்கியது. 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வலுவான மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

    ×