search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Express"

    • நாகர்கோவிலில் இருந்து நெல்லை, கோவில்பட்டி, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.

    களக்காடு:

    நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், கடப்பா, வாடி, புனே, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று நாங்குநேரி தாலுகா பகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்த ரெயில் இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகர்கோவில்-மும்பை ரெயில் நாங்குநேரியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது. இந்த ரெயிலுக்கு நாங்குநேரி பகுதி பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    ×