search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorists are scared by"

    • வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து நின்று கொண்டிருந்தது.
    • இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் யானைகள், மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதியில் இருந்து தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிக ளுக்குள் வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணை அருகே யானை கூட்டம் சாலையோரம் வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல வழி இன்றி அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையிலேயே நின்று கொண்டிருந்தது.

    இதனால் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிற்கும் நிலை ஏற்பட்டது.

    எனவே இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என்று வனத்து றையினர் தெரிவித்தனர்.

    ×