என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Motor Vehicle Accident"
- நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் நடத்தப்பட உள்ளது.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தொடங்கி வைக்க உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகிற 11-ந்தேதி (சனிக் கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகிற 11-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் நடத்தப்பட உள்ளது.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்து கொள்ளப்படு கின்றன.
மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத் தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்