search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkey kills Infant"

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Monkey #Women #UP
    ஆக்ரா:

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது.

    இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை சேர்ந்தவர் பூரான்தேவி(59). இவர் வயல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் அவரை சரமாரியாக தாக்கி கடித்தது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரை தொடர்ந்து குரங்குகள் கடித்து குதறின.

    படுகாயம் அடைந்த அவரால் எழுந்து ஓட முடியவில்லை. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள், குரங்குகள் கூட்டத்தை விரட்டியடித்துவிட்டு பூரான் தேவியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஆக்ராவில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை திடீரென்று பாய்ந்து தாக்குகின்றன. தற்போது உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் பீதி நிலவுகிறது. #Monkey #Women #UP
    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த 12 நாள் குழந்தை குரங்கிடம் சிக்கி கடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Monkey #Kills #Baby
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள மொஹல்லா கச்சேரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் அமர்ந்தவாறு பிறந்து பன்னிரெண்டே நாளான தனது ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு பாய்ந்தோடி வந்த ஒரு குரங்கு அந்தப் பெண்ணின் அரவணைப்பில் இருந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறித்துச் சென்றது. இதனால் பதறிப்போன அந்த தாயின் கூக்குரலை கேட்ட குடும்பத்தினர் வெளியே ஓடிவந்து, குரங்கை விரட்டிச் சென்றனர்.

    அவர்களிடம் பிடிபடாமல் மரங்களின்மீதும் வீடுகளின்மீதும் குழந்தையுடன் தாவியேறிச் சென்ற குரங்கு மறைந்து விட்டது.



    இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அந்த குழந்தை கடிபட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட உறவினர்கள் அதை மீட்டெடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  #Monkey #Kills #Baby
    ×