search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money shortage"

    தாடிக்கொம்பு பகுதியில் ஏ.டி.எம். மையங்களில் பண தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மில்கள் உள்ளன. அரசு அலுவலர்கள், விவசாயிகள் என பலர் இப்பகுதியில் உள்ள 2 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.

    அந்த 2 தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. தனியார் வங்கி சார்பில் 1 ஏ.டி.எம். மையம் உள்ளது. இவற்றில் பெரும்பாலும் தனியார் வங்கி ஏ.டி.எம்.முறையாக இயங்கி வருகிறது. ஆனால் தேசியமயமாக்கப்பட் வங்கி ஏ.டி.எம்.களில் பெரும்பாலும் பணம் இருப்பதில்லை. இதுமட்டுமின்றி சில நேரங்களில் மிஷின்கள் இயங்குவதில்லை.

    இதனால் மாத தொடக்கத்தில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் திண்டுக்கல் வந்து பணம் எடுத்து செல்கின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் பெரும்பாலும் ஊழியர்கள் பயன் படுத்துவதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    எனவே வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையங்களில் நிலவும் பண தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஊட்டியில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    ஊட்டி:
     
    வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நீலகிரி முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்ல வில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளைகள் பூட்டு போட்டு இருந்தன.

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 95 உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 125 ஏ.டி.எம்.கள் உள்ளன. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட வில்லை. வங்கிகளில் இருந்தும் பணத்தை எடுக்க முடியவில்லை. பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும், தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கான பணத்தை வங்கியில் இருந்து பெற முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிராமப்பகுதிகளில் விளையும் மலைக்காய்கறிகளை ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள், தங்களது விளைபொருட்களை வியாபாரிகளுக்கு விற்று விட்டு முழுதொகையை பெற முடியாமல் குறிப்பிட்ட செலவுக்கான தொகையை மட்டும் பெற்று செல்கின்றனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு இருப்பதால் ஊட்டி வர்க்கி, சாக்லெட், நீலகிரி தைலம் போன்ற பொருட்களை சுற்றுலா பயணிகள் தேவையான அளவுக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நீலகிரி மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நடைபெறும் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது.
    ×