என் மலர்
நீங்கள் தேடியது "Modakurichi Government College"
- சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
- அழைப்பானை மாணவர்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப ப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023–-24-ம் கல்வி ஆண்டுக்கு இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 500 இடங்களுக்கு 4,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30-ந் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
தேசிய, மாநில, மாவட்ட அளவில் தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், தேசிய மாணவர் படையில், 'யு' சான்றிதழ் பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், அந்தமான் நிகோபர் பகுதியை சேர்ந்த தமிழக மாணவர்கள் உரிய சான்றுடன் பங்கேற்கலாம்.
வரும் ஜூன் மாதம் 1-ந் தேதி காலை 10 மணிக்கு பி.எஸ்.சி.கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. 2-ந் தேதி காலை 10 மணிக்கு பி.காம் வணிகவியல், பி.காம் சி.ஏ., வணிகவியல் கணினி பயன்பாடு, பி.பி.ஏ., சி.ஏ. வணிய நிர்வாகவியல் கணினி பயன்பாடு மாண வர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
தொடர்ந்து 5-ந் தேதி காலை 10 மணிக்கு மொழி பாடங்களுக்கான தமிழ், ஆங்கில பாட மாண வர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இளநிலை பட்டப்படி ப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பி த்தவர்களுக்கு அழைப்பானை மாண வர்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்ன ஞ்சல் முகவரிக்கு அனுப்ப ப்படும். ஏற்கனவே TNGASA என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
மாணவர்களின் மதிப்பெண் அரசின் இட ஒதுக்கீடு முறையை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை வழங்கப்படும். கலந்தாய்வுக்கு வருவோர் உரிய நாளில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி டி.சி. நகல், 10, பிளஸ்- 1, பிளஸ் -2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, 2 போட்டோ, ஆதார் கார்டு அசல், நகல் – 5 படிவம், கல்லூரி கட்டணத்துடன் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வர வேண்டும்.
மாணவர்களின் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு விபரம் www.gascm.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் கல்லூரி தகவல் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.






