search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister kadambaur raju"

    தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பகல் கனவு காண்கிறார் அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என்று கடம்பூர் ராஜூ கூறினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வாகை மர திடலில் அ.தி.மு.க சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நகர கழக செயலாளர் கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். தங்கவேலு, ஞானராஜ், ராஜா பி.வி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோககிருஷ்ணன் வரவேற்று பேசினார். அல்லி கண்ணன பேசினார். கூட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும் எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பகல் கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என்றார். மாதிரி சட்டமன்றம் என்று நடத்திய சட்டமன்றத்தை மக்கள் பார்த்து சிரித்ததனால் கூட்டணி கட்சி தலைவர்களை மீண்டும் தூது அனுப்பி சட்டமன்றத்திற்கு வந்தார்.

    இது தான் அவரின் நிலைமை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சியை நடத்தி வருகின்றார். அம்மாவின் கனவை நிறைவேற்றி வரும் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என்றார்.

    மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை போராடி பெற்றுதறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மாவின் நீண்டநாள் கனவான எய்ம்ஸ் மருத்துவ மனை மதுரையில் அமைவதற்கு தீவர முயற்சி எடுத்து மக்களின் பயன்பாட்டிற்காக அம்மாவின் ஆட்சி தீவிரமாக பாடுபட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முடிவில் கணேசன் நன்றி கூறினார். #tamilnews

    ×