search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "method selection"

    • 2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
    • எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையம்:

    2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், பாகங்கள் கண்டறிதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, அணி வகுப்பு பயிற்சி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி காட்டுவார்கள். ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உத்தரவின்படி சுபேதார் அன்பழகன் தலைமை வகிக்க, ஹவில்தார் விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வினை நடத்தினர். இந்த தேர்வில் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேனிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, பர்கூர் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 146 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள்

    அந்தோணிசாமி, சிவகுமார், நீலாம்பாள், முருகேசன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×