search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant sacrifice"

    • அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள தட்டான்ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 42). மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் மீன் வாங்குவதற்காக புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். புவனகிரியை அடுத்த சியப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த செல்லதுரை மீது வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி துடிதுடித்து இறந்து போனார்.

    இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×