search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Men's - Women's"

    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி கீழப்பாவூர் புது மைதானத்தில் நடைபெற்றது.
    • பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டு குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் விளையாட்டு குழு சார்பில் தென்னிந்திய அளவிலான 4-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி கீழப்பாவூர் புது மைதானத்தில் நடைபெற்றது.

    முதல் போட்டியை கீழப்பாவூர் விளையாட்டு குழு நிர்வாக குழு உறுப்பினர் சுபா தொடங்கி வைத்தார்.

    இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி முதல்பரிசும், சென்னை போஸ்டல் அணி 2-வது பரிசும் பெற்றது. பெண்கள் பிரிவில் ஈரோடு பி.கே..ஆர். பெண்கள் கல்லூரி அணி முதல்பரிசும், ஒட்டன்சத்திரம் எஸ்..எம்.கே.வி.சி. அணி 2-வது பரிசும் பெற்றன.

    ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ. 1லட்சம் ஆலங்குளம் செல்வராணி பட்டு மகால் பிரின்ஸ் தங்கம் சார்பிலும், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம் கீழுப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் பொன்செல்வன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் சார்பிலும், அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த இரு அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் பரமசிவன், சந்தோஷ், விக்னேஷ் ஆகியோர் சார்பிலும் வழங்கப்பட்டது.

    அதே போல் பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.75 ஆயிரம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எஸ்.மதியழகன் சார்பிலும், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரம் கண்ணன், சரவணன் ஆகியோர் சார்பிலும், அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வைரசாமி, சங்கர் ஆகியோர் சார்பிலும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டு குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார்.

    விழாவில் பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, விளையாட்டுக்குழு சட்ட ஆலோசகர்

    கே.ஆர்.பி.பிரபாகரன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், கீழப்பாவூர் விளையாட்டுக்குழு கவுரவ தலைவர் செல்வன், தலைவர் மனோகரன், தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் அருள்இளங்கோவன், விளையாட்டுக்குழு துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் வைகுண்டராஜ், பொருளாளர் அருணாசல முத்துச்சாமி, துணை செயலாளர் இசக்கிமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வி, உமா என்ற பவித்ரா, வசந்தி, ராம பாண்டியன், மாரிமுத்து, ராஜாமணி, சுடலைபூபதி, பொருட்செல்வன், கண்ணன், காந்தி, முருகன், கோட்டைச்சாமி, காளிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் சந்தானம், மதியழகன்,சுரேஷ், சுடலைமணி, தங்கச்சாமி, சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் லெட்சுமி சேகர்,சுரேஷ் ஆறுமுகபாண்டி என்ற அழகர், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மதியழகன்,மாரியம்மாள், லதா, முத்துலட்சுமி, முத்து லட்சுமி, பொற்செல்வி, கவிதா, கமலா, சிவஜீனா, பவித்ரா, வைரச்சாமி, சேவியர்ராஜன், பேரூராட்சி கவுன்சிலர் சீ.பொன்செல் வன், தலைமை ஆசிரியர் முருகேசன், அழகுதுரை, பேரூர் செயலாளர் ஜெகதீசன், வைகுண்டம், அன்பரசு, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×