search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mechants Association"

    • ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
    • பாவூர்சத்திரம் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் , பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான கல்லூரணி, மடத்தூர், திப்பணம்பட்டி, சடையப்பபுரம், கீழப்பாவூர், கொண்டலூர், சிவகாமிபுரம். ஆவுடையானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

    அவர்களுக்கு பாவூர்சத்திரம் வணிகர் சங்கம் சார்பில் ஒளிரும் ஸ்டிக்கர் , பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி பங்கேற்று பக்தர்கள் அனைவரும், சாலையின் வலது புறம், கூட்டமாக செல்லாமல், வரிசையாக செல்லுமாறு அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செய லாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்யராஜ் மற்றும் காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயணசிங்கம், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், குமார்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×