search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "market is closed today"

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கோவில்களின் கம்பத்திற்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், தீர்த்த குடங்கள் எடுத்தும் வருகின்றனர்.

    பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகரமே களைக்கட்டி உள்ளது.

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு பெரிய மார்க்கெட் வியா பாரிகள் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    இதையொட்டி மார்க்கெ ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ள்து. இதனால் இன்று காலை வ.உ.சி. காய்கறி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப ட்டது.

    ×