என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maniyarasan"

    மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மே 17 இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஜ.நா. மன்றத்தில் தூத்துக்குடியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் படுகொலைகள், எட்டு வழிச்சாலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், இப்பிரச்சனைகளில் ஐ.நா. மன்றம் தலையிட வேண்டும் என்றும் பேசினார்.

    பின்னர் பெங்களூர் விமான நிலையத்தில் ஆக.9-ந்தேதி திருமுருகன் காந்தியை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது புதிய வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜனநாயக மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதை எதிர்த்து மனித உரிமைப் போராளிகள் அனைவரும் போராட வேண்டும். மேலும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆங்காங்கே மனித உரிமைப் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், அரங்க குணசேகரன், திருநாவுக்கரசு, பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான மணியரசன், சென்னை செல்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு தனது நண்பர் சீனிவாசன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

    இரவு சுமார் 9.00 மணியளவில், வல்லம் சாலையிலுள்ள உணவு கிடங்கு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மணியரசன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், மணியரசன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பயன்படுத்தி மணியரசனிடம் இருந்த கைப்பை ஒன்றை பறித்துக் கொண்டு அந்நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.


    கீழே விழுந்த மணியரசன் சிராய்ப்பு காயமடைந்ததால், அவர் உடனடியாக தஞ்சாவூர் விநோதகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற மணியரசனின் கைபையில் 700 ரூபாய் பணமும், இரண்டு ஏ.டி.எம் அட்டைகள், பான் கார்டு, கையடக்க கணினி, கைபேசி போன்றவை இருந்துள்ளது.
    இது தொடர்பாக மணியரசன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு (கு.எண்.301/2018, ச/பி 394 இதச) செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வழக்கில் எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி பதிவுகளை தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எதிரிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். #TNAssembly #EdappadiPalanisamy
    ×