search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "man corpse"

    • பெனிட்டோ போஸ்கோ திருப்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார்.
    • நேற்று ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.


    பரமத்திவேலூர்:


    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, ஈருடையான்பட்டு கிராமம், மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் மதலைமுத்து.


    இவருடைய மகன் பெனிட்டோ போஸ்கோ(வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது உறவினருடன் கடந்த 24-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா,ஜேடர்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு வந்தார். 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் உள்ள தனது அண்ணன் அருள்நிர்மல்ராஜ், தனது தாயை பார்க்க வருமாறு போன் செய்து அழைத்துள்ளார்.


    பெனிட்டோ போஸ்கோ திருப்பூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் 2 நாட்கள் ஆகியும் திருப்பூர் வராததால் அவரது அண்ணன் மீண்டும் போன் செய்துள்ளார்.ஆனால் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து ஜமீன்இளம்பள்ளிக்கு வந்து பார்த்தார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார்.


    இந்த நிலையில் நேற்று ஜமீன் இளம்பள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அருள்நிர்மல்ராஜ் அங்கு சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது பெனிட்டோ போஸ்கோ என்பது தெரியவந்தது.இது குறித்து அவர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


    புகாரின் அடிப்படையில் போலீசார் பெனிட்டோ போஸ்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.காவிரி ஆற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி இறந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.


    ×