search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras High Court ஸ்டெர்லைட் போராட்டம்"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ThoothukudiFiring #CBIProbe #MadrasHighCourt
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனும் விசாரித்து வருகிறது. இது தவிர இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்பது, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.



    துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசாங்கம் உண்மை நிலவரங்களை தெரிவிக்க மறுத்து வருவதால் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிப்பதே முறையாக இருக்கும் என தெரிவித்தார். எனவே, இந்த விஷயம் தொடர்பாக மனுதாரர் சி.பி.ஐ.-ஐ அணுகலாம் என்றும் கூறினார்.

    அதேசமயம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #ThoothukudiFiring #CBIProbe #MadrasHighCourt
    ×