என் மலர்
நீங்கள் தேடியது "Madhavaram dairy farm"
மாதவரம் மத்திய பால் பண்ணை புதிய தானியங்கி நவீனமயமாக்கப்பட்ட பால் பண்ணையாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
சென்னை:
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை பெருநகர நுகர்வோர்களின் பெருகி வரும் தேவைகளை எதிர் கொள்ளும் வகையில் பால்பண்ணைகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகிறது. அதனடிப்படையில் தற்பொழுது நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் என்ற கையாளும் திறன் கொண்ட மாதவரம் மத்திய பால் பண்ணை, 10 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்ட புதிய தானியங்கி நவீனமயமாக்கப்பட்ட பால் பண்ணையாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விரிவாக்கம் செய்யப்படும்.
சேலம் பால்பண்ணையின் பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற அளவிலிருந்து, 7 லட்சம் லிட்டர் என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் டெய்ரி ஒயிட்னர் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தஞ்சாவூர் ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 55,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பண்ணை 25,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் மட்டுமே கொண்டுள்ளது. இது ஒரு லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட, பால் பொருட்கள் தயாரிக்கும் வசதிகளுடன் கூடிய தானியங்கி பால் பண்ணையாக 75 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
மாவட்ட ஒன்றியங்களின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடனும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், 30 மாவட்டங்களில் மொத்தம் 500 பாலகங்கள் தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
திருச்சி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை, அதிநவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி ஐஸ்கிரீம் கலவை தயாரிக்கும் கருவி, கெட்டியாக்கும் அரை தானியங்கி சிப்பங்கட்டும் இயந்திரம், குளிரூட்டும் அமைப்பு மற்றும் குளிர்பதன சேமிப்பு அறைகள் கொண்டதாக அமையும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
சென்னை பெருநகர நுகர்வோர்களின் பெருகி வரும் தேவைகளை எதிர் கொள்ளும் வகையில் பால்பண்ணைகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகிறது. அதனடிப்படையில் தற்பொழுது நாளொன்றுக்கு 3.5 லட்சம் லிட்டர் என்ற கையாளும் திறன் கொண்ட மாதவரம் மத்திய பால் பண்ணை, 10 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறன் கொண்ட புதிய தானியங்கி நவீனமயமாக்கப்பட்ட பால் பண்ணையாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விரிவாக்கம் செய்யப்படும்.
சேலம் பால்பண்ணையின் பால் பதப்படுத்தும் திறன் நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற அளவிலிருந்து, 7 லட்சம் லிட்டர் என்ற அளவிற்கு அதிகரிக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 30 மெட்ரிக் டன் டெய்ரி ஒயிட்னர் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.
வேலூர் திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய பால்பண்ணை நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டது. தற்போதுள்ள பால்பண்ணை இயங்கும் இடம் பெங்களூர் நெடுஞ்சாலையில் பாலாறுக்கு அருகே அமைந்துள்ள காரணத்தினால், தற்போதுள்ள இடத்திலேயே விரிவாக்க பணிகள் மேற்கொள்வது இயலாததாக உள்ளது. இதனால், நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை, 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற் நுட்ப கலை நயத்துடனும், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் பால் பதப்படுத்தும் உபகரணங்களுடன் புதிய இடத்தில் உருவாக்கப்படும்.

மாவட்ட ஒன்றியங்களின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடனும், நுகர்வோர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், 30 மாவட்டங்களில் மொத்தம் 500 பாலகங்கள் தலா 4 லட்சம் ரூபாய் வீதம், 20 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
திருச்சி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை, அதிநவீன வசதிகளுடன் கூடிய தானியங்கி ஐஸ்கிரீம் கலவை தயாரிக்கும் கருவி, கெட்டியாக்கும் அரை தானியங்கி சிப்பங்கட்டும் இயந்திரம், குளிரூட்டும் அமைப்பு மற்றும் குளிர்பதன சேமிப்பு அறைகள் கொண்டதாக அமையும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy






